கோபு அண்ணாவிடமிருந்து
சீதனம் பெறுவது எனக்கொன்றும் புதிதல்ல. என்
பிறந்த நாளுக்கு, எங்கள் சஷ்டியப்த பூர்த்திக்கு, ஏன் போனசாக என் மகள் கல்யாணத்திற்கு,
என் பேத்தியின் பிறந்த நாளுக்கு என்று பலமுறை பெற்றிருக்கிறேன்.
ஆனால் இந்த முறை
சற்று வித்தியாசமான சீதனம். தீபாவளிக்கு பிறந்தவீட்டு சீதனம்.
இந்த ரூபாய் நோட்டுக்கள
எப்படி எடுக்கணும்ன்னு எனக்கு அனுப்பின மின்னஞ்சல்ல சொல்லி இருந்தார் கோபு அண்ணா. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நான் இதை பிரிக்கவே போறதில்லை. என் கைக்கு எப்படி வந்து சேர்ந்ததோ அப்படியே வைத்திருப்பேன்.
சிறுகதை விமர்சனப்
போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெறும் வாய்ப்பை கோட்டைவிட்ட எனக்கு (அலுவலக வேலை,
வீட்டு வேலை, பெண்ணின் கல்யாணம், பேத்தியின் ஆக்கிரமிப்பு – பேத்திதான் எங்கள் நேரம்,
மனது எல்லாவற்றையும் மொத்தமாக ஆக்கிரமித்துக் கொண்டு விட்டாளே) ஆறுதலாக இந்த சுலபமான
பின்னூட்டப் போட்டி.
ஆனால் ஒன்று. இந்தப்
போட்டி அறிவிப்பிற்கு முன்பே நான் கோபு அண்ணாவிடம், “நீங்கள் என் வலைத்தளத்திற்கு வருகை
தந்து ஒவ்வொரு பதிவுக்கும் (ஆமாம் மொத்தப்பதிவுகளே தம்மாத்தூண்டுதான்) பின்னூட்டம்
கொடுத்துள்ளது போல் நானும் உங்கள் வலைத் தளத்திற்கு வந்து எல்லாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ (கொஞ்சமா,
நஞ்சமா, அம்மாஆஆஆஆடி எழுநூத்தி ஐம்பது) பதிவுகளுக்கும் கண்டிப்பா பின்னூட்டம் கொடுத்துடறேன்’னு
உதார் விட்டேன். ஆனா இதை முடிக்க நான் பட்ட பாடு. எப்படியோ
உருண்டு, பெரண்டு முடிச்சுட்டேன்.
சக பதிவர்களை கௌரவிப்பதிலும்,
ஊக்குவிப்பதிலும் கோபு அண்ணாவிற்கு இணை அவரே தான். அப்படிப்பட்ட கோபு அண்ணாவிடமிருந்து இந்தப் பரிசு
பெற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. ஆமாம். குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால குட்டுப்படணும்
இல்லையா?
சாதனையாளர் விருது
இதைப் படிக்கும் போது எனக்கு சிரிப்புதான் வந்தது.
750 பதிவுகள், பலப்பல பரிசுகள் இவர் பெற்றதும் இல்லாம விமர்சகர்களுக்கும் தாராளமா வழங்கி,
ஆனா இவர் வலைத் தளத்துல
”சாதாரணமானவன்
தான் ஆனால் ஏதாவது சாதிக்க
வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்”
அப்படீன்னு போட்டுப்பாராம்.
ஆனால் எனக்கு சாதனையாளர்
விருதுன்னு போடுவாராம்.
சிரிப்புத்தான்
வருகுதைய்யா
பாருங்க. என் வலைத் தளத்தின் முகவரிகளை அழகா கொடுத்திருக்கார். இதை கண்டிப்பா இவர் வலைத் தளத்தில் போடுவார். அதற்கு பின்னூட்டங்களோ நூத்துக் கணக்குல வரும். இதுல கொஞ்சம் பேராவது என் வலைத் தளம் பக்கம் வந்து
எட்டிப் பார்ப்பாங்க. இது தீவாளி போனசு.
...............தொடரும்