பிள்ளையில்லா வீடு
சிறு பிள்ளையில்லா வீடு
வைத்தது வைத்த இடத்தில்
கொட்டிக் கவிழ்க்க ஒரு சுட்டி இல்லை
இட்ட கோலத்தை அழிக்க
ஒரு பிஞ்சுப் பாதம் இல்லை
இரு கை கொண்டு அள்ளி
சோற்றை வாரி இறைக்கவும் ஆளில்லை.
காது குளிர ம்மா, ப்பா,
தாத்தா, பாத்தி என்று
அழைக்கும் மழலைச் சொல்
கேட்கவே இல்லை.
ஆனால், எந்நேரமும்
முழுச் சுத்தமாக
இருக்கும் வீடு
எனக்கு தேவையே இல்லை.
இப்படி கலைந்த கோலமும்,
சின்னச் சின்ன சேட்டைகள் செய்யும்
பிள்ளைகள் இருக்கும் வீடுதான்
என் விருப்பம்.
***
நேற்று மாலை மருமகள் போட்ட கண்ணன் காலடிகளை பேத்தி பூஜை முடிந்த சிறிது நேரத்திலே அழித்து விட்டாள். அப்பொழுது என் மகன் கேட்டான், “அம்மா! சில வருடங்களுக்கு முன் நம் வீட்டில் கண்ணன் பாதங்கள் எவ்வளவு நாட்கள் அழியாமல் இருக்கும்” என்று.
அப்பொழுது தோன்றியது இது.
மீள் பதிவு








